2017 - 2018 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி சுப மங்கள பார்வை பெறும் மூன்று இராசிக்காரர்களும்…

2017 - 2018 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சியும் சுப மங்கள பார்வை பெறும் மூன்று இராசிக்காரர்களும்

2017 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி வாக்கியபடி தமிழ் ஆவணி 17 ஆம் நாளும் ஆங்கிலத்தில் செப்டம்பர் 2ஆம் தேதி 2017 ஆம் வருடம் காலை 8 மணி அளவிலும், திருகணிதப்படி தமிழ் ஆவணி 27 ஆம் நாளும் ஆங்கிலத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி 2017 ஆம் வருடம் காலை 7 மணி அளவிலும், கன்னி ராசியிலிருந்து துலாம் இராசிக்கு இடம் பெயர்ந்து மாறுவதை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜை மற்றும் யாகம் பரிகாரங்கள நடக்கும் குருவை சாந்திபடுத்தி பூஜை செய்வார்கள்.

பெயர்ச்சி என்ற சொல் தமிழில் பெயருதல் என்ற சொல் துணை விருத்தி சொல் ஆகும் அதாவது பெயருதல் (moved) என்றால் ஓர் இடம் விட்டு மற்றொரு இடத்துக்கு நகருதல் என்று பொருள்

பெயராது என் சிந்தை புகுந்தாய், போற்றி!

என்று போற்றித் திருத் தாண்டகத்தில் திருநாவுக்கரசர் பாடி இருப்பார் அதாவது இறைவன் எனது உள்ளத்தை விட்டு நீங்கிவிடாதபடி புகுந்து கொண்டான் அவன் திருவடி போற்றி என்று அர்த்தப்படும் படி பாடி இருப்பார், அது போல தேவ ஆசான் ஆன குரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் இராசிக்கு இடம் பெயர்ந்தாலும் அனைவருக்கும் நன்மைகளை செய்யும் இடத்தில் இருந்து பெயராது இருக்க வேண்டும் என்று குரு பகவானை பிரார்த்தி கொண்டு இந்த பகுதி தொடங்குகிறேன். இந்த துலாம் இராசிக்கு போகும் குருவால் கோச்சார ரீதியாக மங்களகரமான பலனை பெற போகிறவர்கள் எந்த எந்த ராசிக்காரர்கள் என்று பார்ப்போம்.

குரு பெயர்ச்சி மற்றும் பார்வை செய்யும் இராசியின் வரைபடம்

கு + ரு = குரு ஆனது இதில் குஎன்றால் உயர்ந்த மேம்பட்ட என்று பொருள் ருஎன்றால் வழிகாட்டி என்று பொருள் அதாவது அஞ்ஞானத்தை ஒழித்து உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டுபவர் என்று பொருள் அப்படிபட்ட குரு பகவான் தான் இருக்கும் இராசியில் இருந்து 5,7,9 ஆம் இராசிகளை பார்வை செய்வார் அவர் பார்வை என்பது ஜோதிடத்தில் அருள் பார்வை என்றே சொல்ல படுகிறது அது ஒருவரின் தோஷங்களை குறைக்கும், துன்பங்களை குறைக்கும், நன்மைகளை அதிகரிக்கும், சமயத்தில் வந்து காப்பாற்றும் மிக உன்னத பார்வையாக கருதப்படுகிறது.



ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு மாற குரு (வியாழன்) ஒரு வருட காலம் எடுக்கும் எனவே இந்த குரு பெயர்ச்சியால் அப்பேர்பட்ட அருள் பார்வையை இந்த வருட காலம் பெறப் போகும் இராசிகள் கும்பம், மேஷம், மிதுனம் ஆகிய மூன்று இராசிக்காரர்களும் அந்த மங்கள அருள் பார்வை உதவப் போகிறது எவ்வாறு என்று பாருங்கள்


கும்ப இராசிகாரர்களுக்கு மற்றும் கும்ப லக்னத்தாருக்கும் - இதுவரை திருமண பாக்கியம் தடைபட்டு இருப்பவர்களுக்கு அந்த தடையை நீக்கும் அருட்பார்வையாக இந்த குரு பார்வை இருக்கும். நிதி ஆதாரம் மற்றும் ஆடம்பரமான வசதிகளை ஏற்படுத்தி தரும் வழி உண்டாகலாம், தொழில் வேலைகளில் மூழ்கி போய் ஈடுபாடுடன் செய்து அதனால் முன்னேற்றம் உண்டாக அருள் கிடைக்கும். சம்பள உயர்வு, கூட்டமைப்பால் உதவிகள், விநியோகத் துறை விற்பனைத் துறையில் இருப்பவர்களுக்கு ஆதாயம் பெருக வாய்ப்பு, சரியான தேவ விசுவாசம் மற்றும் புனித அறிவு பலம் முன்னேற்றம். விற்க தாமத படும் சொத்துக்கள் விற்பனை அடைய அருள் கிடைக்கும். தள்ளிப் போட்டு வைத்துள்ள காரியங்களை எடுத்து நல்லமுறையில் முடிக்க காரிய வெற்றிக்கு குரு பார்வை உதவும். தூரதேச பயணங்கள் சாதகமாக கைகொடுக்கும். புத்துணர்ச்சியான உள்ளுணர்வு அல்லது புதிய யோசனைகள் உண்டாக அருள் கிடைக்கும். தாமதமாகும் குழந்தை பாக்கியம் உண்டாக அருள். ஆன்மீக & சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு காலத்தின் ஒத்துழைப்பு கூடி கிடைக்கும். முதலாளியின் ஆதரவு உண்டாக வாய்ப்பு. தங்களின் இராசிக்கு 3 மற்றும் 5 ஆம் இராசியை குரு பார்பதால் ஊக வணிகம், பங்குச்சந்தை, பொருள் வணிகம் ஆகியவற்றில் லாப உயர்வு உண்டாக வாய்ப்புண்டு. ஜாதகத்தில் சுப குருவாக இருந்து வலிமை அடைந்திருந்தால் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து நடப்பு திசாபுத்தியின் பலத்தை பொருத்தும் மேலே சொன்ன பலன்கள் மிகவும் நன்மையாக அமையும்.

மேஷ இராசிகாரர்களுக்கு மற்றும் மேஷம் லக்னத்தாருக்கும் - இதுவரை திருமண பாக்கியம் தடைபட்டு இருப்பவர்களுக்கு அந்த தடையை நீக்கும் அருட்பார்வையாக இந்த குரு பார்வை இருக்கும். பலன் நலன்புரியக் கூடிய செயல் நடவடிக்கைகளில் ஈடுபட வைப்பார். மாணவர்களுக்கு பரிச்சையில் பதில் கண்டுபிடிக்க ஞாபக சக்தி உதவி. உடல் ஆரோக்கியம் மற்றும் புத்துணர்ச்சி தந்திடுவார். அறிவுசார் வேலைகளில் இருக்கும் பயத்தை நீக்கி கொடுப்பார். வாக்கு கொடுத்த உறுதிமொழிகளை காப்பாற்ற அருள் கிடைக்கும். மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சிகிச்சை கிடைத்து உடல் தேற வழி பிறக்கும். நீதி விசாரணை வழக்குகளில் தன்னுடை நியாயத்தை விரிவாக பேச வாய்ப்பு. இலக்கிய மற்றும் படைப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு புதிய படைப்பாற்றல் பிறக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிணக்குகள் நீங்க அருள் கிடைக்கும். கூட்டு வியாபாரம் தொழில் செழிக்க அருட்பார்வை உண்டாகும். மற்றவர்கள் உங்களிடம் சற்று கருணையோடு நடந்து கொள்ளுவார்கள். வாழ்க்கை துணையால் உதவிகள் கிடைக்க வாய்ப்பு. குடும்ப சடங்கு விழாக்கள் எடுத்து அது சிறப்பாக நடக்க அருட்பார்வை இருக்கும். தங்களின் இராசிக்கு 3 மற்றும் 11 ஆம் இராசியை குரு பார்பதால் வணிகத்தில் சில துணிச்சல் ஆன காரியங்களை செய்து அதில் லாப உயர்வு உண்டாக வாய்ப்புண்டு. ஜாதகத்தில் சுப குருவாக இருந்து வலிமை அடைந்திருந்தால் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து நடப்பு திசாபுத்தியின் பலத்தை பொருத்தும் மேலே சொன்ன பலன்கள் மிகவும் நன்மையாக அமையும்.

மிதுன இராசிகாரர்களுக்கு மற்றும் மிதுனம் லக்னத்தாருக்கும் - இதுவரை திருமண பாக்கியம் தடைபட்டு இருப்பவர்களுக்கு அந்த தடையை நீக்கும் அருட்பார்வையாக இந்த குரு பார்வை இருக்கும். மனதளவில் பிரிந்து இருந்து தாம்பத்திய ஜோடிகளுக்கு பிரிவு நீங்கி இணைய வாய்ப்புண்டாகும். உற்சாகத்தை தூண்டும் பணவரவுகள். சண்டை சச்சரவுகள் குறைந்து கூட்டாளிகளுடன் இணக்கமான வியாபாரம் நன்மை. இருதலைக்கொள்ளி எறும்பு நிலையை போல இந்த பக்கமும் முடிவெடுக்க முடியாமல் அந்த  பக்கமும் முடிவெடுக்க முடியாமல் தத்தளித்து கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு முடிவெடுக்கும் ஆற்றல் அல்லது முடிவு தானாக உண்டாகுதல். புதிய வீடு வாசல் புகுதல். வேலைவாய்ப்பு அமைய தடைபட்டு இருப்பவர்களுக்கு அந்த தடையை நீக்கும் அருட்பார்வையாக இந்த குரு பார்வை இருக்கும். இந்த இராசி மாணவர்களுக்கு அறிவுக்கூர்மை பலப்பட வாய்ப்பு கிடைக்கும். காதல் விவகார சச்சரவுகள் தீர வாய்ப்பு. தங்களின் இராசிக்கு 9 மற்றும் 11 ஆம் இராசியை குரு பார்பதால் சந்தை வணிகம், பொருள் வணிகம் ஆகியவற்றில் லாப உயர்வு. நுண்ணறிவுடன் காரியங்களை தீர்மானிக்கும் அருள் கிடைக்கும். உயர்உயர்  கல்வி வளர்ச்சி உண்டாகும். வாழ்க்கை கட்டமைப்பை ஒரு படி உயர்த்து கூடிய வாய்ப்பும் கிடைக்கும். ஜாதகத்தில் சுப குருவாக இருந்து வலிமை அடைந்திருந்தால் அவர் அவர் ஜாதக பலத்தை பொருத்து நடப்பு திசாபுத்தியின் பலத்தை பொருத்தும் மேலே சொன்ன பலன்கள் மிகவும் நன்மையாக அமையும்.

0 Response to "2017 - 2018 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி சுப மங்கள பார்வை பெறும் மூன்று இராசிக்காரர்களும்…"

கருத்துரையிடுக

Powered by Blogger