கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் - ராகு கேது கிரகங்களை பற்றிய பார்வை…

கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் - ராகு கேது கிரகங்களை பற்றிய பார்வை…


கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பவர்கள் ராகு கேதுக்கள் என்ற முதுமொழி ஜோதிடத்துறையில் புழுக்கத்தில் உள்ள புகழ் பெற்ற முதுமொழி ஆகும், அதென்னங்க கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார்  புரியவில்லையே என்று புதிதாக இதை கேட்பவர்கள் கருதலாம் அதாவது ஜோதிடத்தில் ஒரு புள்ளியில் இருந்து அதாவது ஒருவித கோணத்தில் இருந்து பார்த்து சூரியன் முதலான மற்ற அனைத்து கிரகங்களையும் விட சாயா கிரகங்கள் என வர்ணிக்கப்படும் ராகு கேது ஆகிய இரு கிரகங்கள் மிக பலமானவர்கள் என்று ஜோதிடத்தில் சொல்வார்கள். அப்பேர்பட்ட ராகு கேது செயல்படும் முறையை வர்ணிக்கவே இந்த கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் என்ற முதுமொழி வந்தது ஜோதிடத்தில்.

சரி இந்த கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் என்றால் என்னவென்று பார்ப்போம், ராகு கேதுக்கள் ஒன்றை கெடுத்து மற்றொன்றை கொடுப்பார்கள் அல்லது ஒன்றை கொடுத்து மற்றொன்றை கெடுப்பார்கள். இதில் கெடுத்து கொடுப்பார், கொடுத்து கெடுப்பார் என்பது ராகுவுக்கும் பொருத்தும் அது போலவே கேதுவுக்கும் பொருத்தும்.

சரி விஷயத்திற்கு வருவோம் இதில் கேது எப்படி செயல்பாடுவார் ராகு  எப்படி செயல்பாடுவார் என்று பார்ப்போம் முதலில் கேதுவை பார்ப்போம்

கேது = அறியாமையை மற்றும் பந்தபாசத்தை கெடுத்து பக்குவ ஞான அறிவை கொடுப்பார் கேது வேறுவிதத்தில் சொல்லுவதானால் பக்குவ ஞான அறிவை கொடுத்து அறியாமையை மற்றும் பந்தபாசத்தை கெடுப்பார்.

இதற்கு உதாரணமாக ஆன்மீகத்தில் உள்ள ஒரு ஞானகுருவை எடுத்துகொள்ளலாம் அவர் தன்னிடம் வரும் சீடனுக்கு பக்குவ ஞான அறிவை கொடுத்து அறியாமையை மற்றும் பந்தபாசத்தை கெடுப்பார் அல்லது அழிப்பார்.

அதாவது இதை திருவள்ளுவர் இவ்வாறு கூறுவார்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

இதன் பொருள் மற்ற உலக பற்றுகளை விட்டொழிக்க வேண்டும் என்று நினைக்கூடியவர்கள் பற்றில்லாதவராக யார் இருக்கிறாரோ அவரிடம் மட்டும் பற்றுக் கொள்ள வேண்டும், அதாவது எந்த விதத்திலும் பற்று இல்லாமல் இருக்ககூடியவர்கள் இரண்டு தரப்பினர் ஒன்று இறைவன் மற்றொன்று ஞானத்துறவிகள் அவர்களை ஒருவன் பற்றிக் கொண்டால் உலகத்தின் மீதி இருக்ககூடிய பற்றுகள் ஒழிந்து விடும் அல்லது அவர்கள் இவனிடமுள்ள அந்த பந்தபாச பற்றுகளை ஒழித்துவிடுவார்கள்.

அதெல்லாம் சரியங்க இதனால கேது என்ன கொடுப்பார் என்று சொல்ல வருகிறீர்கள் என்று கேட்டீர்கள் என்றால் கேது பக்குவ ஞான அறிவு தருவார் அதனால் என்ன நன்மை என்று கேட்டீர்கள் என்றால் அனுபவ பாடம், நிம்மதி, சாந்தி, பேரின்பம், முக்தி இப்படியான பயன்களில் ஏதாவது சிலவற்றை அவர்களுக்கு கொடுப்பார்கள் அதுவே அரைகுறை ஞானமாக போயிவிட்டால் ஆபத்தை கொடுப்பார் சரி இதில் எதை கேது எதை கெடுப்பார் உலகப்பற்று உடன் கூடி கற்பனையான அறிவு அல்லது தீவிர ஆர்வம் ஆசை போன்றவற்றை கெடுப்பார் கேது.

போதும் சார் இந்த ஆன்மீக புராணம் ஒரே போரடிக்குது ராகு பத்தி சொல்ல ஆரம்பிங்க சார் என்று சிலருக்கு தோன்ற ஆரம்பிக்கலாம் அதுவும் சரி தான் இப்போது ராகுவை பற்றி பார்ப்போம்

ராகு = பக்குவ ஞான அறிவை கெடுத்து அறியாமையை மற்றும் பந்தபாசத்தை கொடுப்பார் இராகு, வேறுவிதத்தில் சொல்லுவதானால் அறியாமையை மற்றும் பந்தபாசத்தை கொடுத்து பக்குவ ஞான அறிவை கெடுப்பார்.

இதற்கு உதாரணமாக பொழுதுபோக்குத் துறைகளில் ஏதாவது ஒன்றில் இருக்கும் ஒரு தொழிலதிபரை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம் அவருக்கு மக்களை கற்பனை உலகத்திற்கு கூட்டி போதல் அல்லது கற்பனையான ஏதேனும் குதூகலத்தை கொடுப்பது அல்லது குறுகிய காலத்திற்கு ஏதாவது ஒரு சந்தோஷமான விஷயங்களை காட்டி அவர்களுக்கு தற்கால இன்பத்தை கொடுக்க முயற்சி செய்வார் இதன் மூலம் மனிதர்கள் எதார்த்த அறிவை அந்த காலத்தில் மறந்து ஒருவிதமான கற்பனை சந்தோஷத்தில் இருப்பார்கள் அதுபோல தான் ராகுவின் செயல்பாடு.

அதாவது இதற்கு உதாரணமாக மணிமேகலையில் வரக்கூடிய ஒரு பாடலை சுட்டிக் காட்டலாம்

" பேதைமை சார்வாச் செய்கை யாகும்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
அருவுரு சார்வா வாயி லாகும்
வாயில் சார்வா ஊறு ஆகும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் றோன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரணமாக
வருமே ஏனை வழிமுறைத் தோற்றம்
தோற்றஞ் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு " - (மணிமேகலை 30-ஆம் காதை 103-116)

 இதன் தொடர்ச்சி காணொளியில் உள்ளது (remain continuation of this video) 





12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திரனின் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் ஸ்தானங்கள்..


12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கும் சந்திரனின் ஆட்சி, உச்ச, நீசம் பெறும் ஸ்தானங்கள்...

மேஷம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

ரிஷபம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 3 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 1 (லக்ன) ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

மிதுனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

கடகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  லக்ன ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 12 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 10 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் 3 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

துலாம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு  10 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 8 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் 2 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

விருச்சிகம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 9 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் விருச்சிக லக்ன ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 8 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 6 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 12 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

மகரம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 7 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 5 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 11 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

கும்பம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 6 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 4 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் 10 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.

மீனம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு 5 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் ஆட்சி பலத்தை அடைவார் - 3 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் உச்ச பலத்தை அடைவார் - 9 ஆம் ஸ்தானத்தில் இருந்தால் சந்திரன் நீச நிலையை அடைவார்.



திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள், உணவு நாட்டங்கள், அடியார்கள்...

நட்சத்திரம் - திருவாதிரை
நட்சத்திர ஆதிபத்ய கிரகம் - ராகு
நட்சத்திர அதிதேவதைகள்  - ருத்திரன், பைரவர்
நட்சத்திர யோனி - ஆண் நாய்
நட்சத்திர கணம் - மனுஷ கணம்
நட்சத்திர பூதம் - நீர்
நட்சத்திரத்தின்இராசி இருப்பு - மிதுனம் ராசி
இராசி சக்கரத்தில் இருப்பு பாகை - மிதுன ராசியில் 66:40:00 முதல் 80:00:00 பாகை வரை
இராசி நாதன் - புதன்

சந்திரன் இந்த நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறந்தவர்களுக்கு திருவாதிரை நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரமாகும். ஜென்ம இராசி மிதுனம் இராசியாகும்.
பொதுகுணங்கள் ஏன் சந்திரன் - சந்திரனே மனசுக்கு காரன் மற்றும் உடல்காரகனும் இந்த கிரகம் தான் அதனால் தான் ஒவ்வொரு மனிதனின் மன குண அமைப்பை பார்க்க ஜோதிடத்தில் பெரிதும் பயன்படுத்தபடுகிறது.



திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுகுணங்கள் -
இராசி சக்கரத்தில் ஆறாவது நட்சத்திரமாக இருக்கும் திருவாதிரையில் சந்திரனிருக்க பிறந்தவர்கள் வெளியில் பார்ப்பதற்கு ஒரு மாதிரியான மனமும் உள்ளே அதற்கு சற்று முரணான குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள் உதாரணமாக ஒருவர் வெளியில் பார்ப்பதற்கு முரட்டுதனமான ஆள் போல தோன்றுவார் ஆனால் நன்றாக பழகி பார்க்கும் போது தான் தெரியும் அவர் பாசமான, ஈரமான மனத்தை உடையவர் என்று இது போல வித்தியாசங்கள் இருக்கலாம். பிடிவாதமானவராக இருக்கலாம், எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பதை போல உடனடியாக விஷயங்களை நம்பமாட்டார்கள் நம்பி விட்டால் பின் யோசிக்காமால் இறங்கிவிடுவார்கள். ருத்ர என்றால் ஓங்கி ஒலிப்பது என்றும் பொருள் வரும் எனவை இந்த நட்த்திரத்தில் பிறந்தவர்கள் சற்று உரக்க பேசுவது என்பது வாடிக்கையாக இருக்கும். சங்கடப்படும் அளவுக்கு அல்லது சங்கடமான கேள்விகளையும் துணிந்து கேட்கக்கூடியவர், தன்னையும் குழப்பி மற்றவரையும் எளிதில் குழப்பு வல்லமை உண்டு. தவறு கண்டால் அல்லது முறைமாறினால் கோபம் கொள்வார், பலமான ஆற்றல் அல்லது தைரியம் பெற்றவர். அதே போல சிலர் அமைதியானவர்கள் போல தெரிவார்கள் ஆனால் தன் காரியம் என்று வந்துவிட்டால் மிக வேகம் காட்டுவார்கள். வன்முறையான, கடுமையான குணங்கள் சில இருக்கலாம். அதே போல துரோகத்தை ஒரு போதும் பொருத்து கொள்ள மாட்டார்கள். தக்க பதிலடி கொடுப்பதில் வல்லவர்கள். தீர்மானித்த காரியத்தை செய்து முடிக்க கடுமையாக உழைப்பாரகள். சில அத்துமீறலான நடவடிக்கையிலும் பயப்படாமல் ஈடுபட்டுவிடுவார்கள். ஆன்மீகத்தில் இவர்கள் சத்தியத்தை உணர்வதிலும் உரைப்பதிலும் வல்லவர்கள் என்று அழைக்கபடுகிறது அதாவது தன் மனதுக்கு உண்மை என்று பட்ட விஷயத்திற்காக பயபடாமல் உழைக்க அல்லது போராடக் கூடியவர்கள். ஆக்கும் ஆற்றலை காட்டிலும் அழிக்கும் ஆற்றல் நிரம்ப பெற்றவர்கள் உதாரணமாக உடைக்கூடிய பொருட்கள் இவர்களின் கைகளுக்கு வந்தால் சீக்கிரம் உடைத்து விடுவார்கள். They have passionate and sharp personalities to do anything neither a good nor a bad. 

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவான உணவு நாட்டங்கள் மற்றும் சுவை விருப்பங்கள் -
அசைவ உணவை உண்ணக்கூடிய குடும்பத்தில் பிறந்திருப்பார்களானால் ருசியான எல்லா அசைவ வகை உணவுகளை விரும்பி உண்பார்கள். அதே போல சைவ உணவை உண்ணக்கூடிய குடும்பத்தில் பிறந்திருப்பார்களானால் நீரில் அல்லது ஆவியில் வேகவைத்த இட்லி, இடியாபம், புட்டு போன்ற வகைகளிலின் மீது நாட்டம் இருக்கும். மேலும் பொதுவாக காரம் சுவை கூட்டபட்ட உணவுகள். குளிர்ச்சியான அமிலவகை பழங்கள் மற்றும் பழச்சாறுகள். அதே போல சர்க்கரை, வெல்லம் அல்லது கருப்பட்டி போன்றவற்றில் ஊற வைக்கபட்ட இனிப்பு வகைகள் பிடிக்கும். தற்காலத்தில் கேக், ஐஸ் கீரிம் போன்ற வகைகளும் பிடிக்கலாம். உலர்ந்த பருப்புகள் மற்றும் பழவகைகள். புளிப்பு சுவையுடன் கூடிய இனிப்பு மற்றும் காரவகைகள் பிடிக்கலாம். ஆவி பறக்கும் சூப்கள் பிடிக்கலாம். சிலருக்கு பாரம்பரிய நீராகாரங்கள் பிடிக்கும். பொதுவாக சொல்வதானால் தாமஸ மற்றும் ராட்ச குண உணவு வகைகளை கலவையாக உண்பார்கள்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த அல்லது சித்தி அடைந்த அடியார்கள் & மகான்கள் -
அரிவட்டாயர், கணநாதர், கூற்றுவர், சடைய நாயனார், விறன்மிண்ட நாயனார் போன்றோர்கள் மற்றும் வைணவத்தில் முக்கியஸ்தரான ராமானுஜர் சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார்.


அரசியல், அரசு பணிகளுக்கான நவகிரகங்களின் துறைகள், இலாகாகள்...

ஜோதிடமும் அரசியலும் பகுதி 4 - அரசியல், அரசு பணிகளுக்கான நவகிரகங்களின் துறைகள், இலாகாகள்... (Navagraha Departments and portfolio of political and government services in Tamil)

இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும், வல்லது-அரசு.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு

கூழும் குடியும் ஒருங்கு இழக்கும்-கோல் கோடி,
சூழாது, செய்யும் அரசு.

அரசியல் பணி, அரசு பணி செய்பவர்க்கு திருக்குறள் சுட்டிக்காட்டும் நெறிமுறைகள் உள்ளன, அந்த மண்ணை சார்ந்த மக்கள் அந்த மண்ணுக்குரிய அரசியலை செய்யாமல் விட்டுவிட்டால் அந்த நிலத்தை இழப்பார்கள், அதே போல அந்த மண்ணை சார்ந்த மக்கள் அந்த மண்ணுக்குரிய அரசு பணிகளில் சேர்ந்து உழைக்காவிட்டால் தங்கள் சுதந்திரத்தையும் தங்கள் நிலத்தின் வளமையையும் இழப்பார்கள். எனவே நேர்மையான அரசியலில் ஈடுபடுவதும் மற்றும் அரசு பணிகளில் ஆர்வமாக சேர்ந்து நேர்மையாக உழைப்பதுவும் அந்த அந்த மண்ணை சார்ந்த மக்களுக்கு மிக முக்கியமான கடமையாகும் இவ்வாறு இருந்தாலும் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான இலக்கை வைத்திருப்பார்கள் உதாரணமாக ஒருவருக்கு சிறந்த தொழில் முனைவராக வர வேண்டும் என்று ஆர்வம் இருக்கும் அவரை வலுவாக  அரசு மற்றும் அரசியலில் நுழை வைக்க முடியாது எனவே அரசு மற்றும் அரசியலில் ஆர்வம் உள்ளவர்கள் அந்த அந்த பணிகளில் சேர கடுமை உழைக்க வேண்டும் பணிகள் கிடைப்பது என்பது இறையருள் மற்றும் அவர் அவரின் வினை குவியலை பொறுத்தது. இப்போது நாம் பார்க்க இருப்பது ஜோதிடமும் அரசியலும் பகுதி 4 - அரசியல், அரசு பணிகளுக்கான நவகிரகங்களின் வழியாக சுட்டுகாட்டப்படும் துறைகள், இலாகாகள் அதாவது ஒவ்வொரு கிரகங்களும் எந்த அரசியல், அரசு பணி துறைகள், இலாகாகளுக்கு ஆதாரமாக இருக்கின்றன என்பதை இப்போது பார்ப்போம்... மீதி காணொளியில் (Video)..



Powered by Blogger