Rakshasa Ganam in Tamil, கணப்பொருத்தத்தில் 27 நட்சத்திரங்களில் ராட்சச கண நட்சத்திரங்கள் & பொதுவான...

Rakshasa Ganam in Tamil, கணப்பொருத்தத்தில் 27 நட்சத்திரங்களில் ராட்சச கண நட்சத்திரங்கள் & பொதுவான...

கணப்பொருத்தத்தில் தேவ கண நட்சத்திரங்கள் மற்றும் பொதுவான தன்மை, The nature of Deva Ganam in Tamil...

கணப்பொருத்தத்தில் தேவ கண நட்சத்திரங்கள் மற்றும் பொதுவான தன்மை, The nature of Deva Ganam in Tamil...

கணப்பொருத்தத்தில் 27 நட்சத்திரங்களில் மனஷ கண நட்சத்திர பொதுவான தன்மை, Nature of Manusya Ganam Tamil...

கணப்பொருத்தத்தில் 27 நட்சத்திரங்களில் மனஷ கண நட்சத்திர பொதுவான தன்மை, Nature of Manusya Ganam Tamil...

கடகம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் - மனைவி வாழ்க்கை துணை அமைப்பு, கிரகம், ஸ்தான சுப அசுப பலன்...

கடகம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு கணவன் - மனைவி வாழ்க்கை துணை அமைப்பு, கிரகம், ஸ்தான சுப அசுப பலன்...

சிம்ம ராசி பெண் (Simma Rasi Women in Tamil) நீங்கள் சிம்ம ராசி பெண்ணா? உங்களின் பொதுவான குணம், ஆசை..

சிம்ம ராசி பெண் (Simma Rasi Women in Tamil) நீங்கள் சிம்ம ராசி பெண்ணா? உங்களின் பொதுவான குணம், ஆசை..

கடகம் & தனுசு ராசிக்காரர்கள் சேர்ந்து பழக இந்த ராசிக்குள் ஏற்படும் பொதுவான நட்பு, காதல் விளைவுகள்…

கடகம் & தனுசு ராசிக்காரர்கள் சேர்ந்து பழக இந்த ராசிக்குள் ஏற்படும் பொதுவான நட்பு, காதல் விளைவுகள்…

ஜெயகாந்தன் எழுத்தாளர் ஜாதகம் கணிப்பு - Jayakanthan Writer Horoscope Tamil, இலக்கியத்திற்கான உயர்ந்த...

ஜெயகாந்தன் எழுத்தாளர் (Jayakanthan Writer Horoscope Tamil) ஜாதகம் கணிப்பு - இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளரும்


 

இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளரும் மேலும் சிறுகதைகள், நாவல்கள் மற்றும் குறுநாவல்கள் என தமிழ் எழுத்துலகில் தன் நிரந்தர பதிப்பையும் மற்றும் தனக்கு உயர்ந்த மதிப்பையும் ஏற்படுத்தி கொண்ட சிறந்த படைப்பாளியும் ஆன எழுத்தாளர் ஜெயகாந்தன் ஜாதக சிறப்புகளை மற்றும் சில ஜோதிட அமைப்புகளை பார்க்கலாம். 
 
எழுத்தாளர் ஜெயகாந்தன் உணர்ச்சிகளின் லக்னமான கடக லக்னத்தில் பிறந்தவர் அந்த லக்னாதிபதியான மனித உணர்ச்சிகளின் அதிபதி சந்திர கிரகம் லக்னத்திற்கு 2 ஆம் வீடு ஆன வாக்கு ஸ்தானத்தில் மகிமையையும் பெருமையையும் தனது அடையாளமாக வெளிப்படுத்தும் மகம் நட்சத்திரத்தில் அமர பிறந்தவர், மகம் ஜெகத்தை ஆளும் என்று பொதுவாக சொல்வார் அந்த மக நட்சத்திர ராசி அதிபதியும் மேலும் லக்னத்திற்கு 2 ஆம் வீட்டின் அதிபதியும் ஆன சூரியன் அதி உச்சமாக அமைந்துள்ளார் இதனால் உறவுகளின் உணர்ச்சிகள் அழுத்தமாக பதிக்கும் எழுத்தும் மேலும் கம்பீரம் குறையாத பேச்சாற்றலும் கொண்டவராக திகழ்தார், வாக்கு மற்றும் வித்தை ஸ்தானத்தின் அதிபதி கிரகமான ஆன சூரியன் கர்ம ஸ்தானத்தில் உச்சமாக அமைந்துள்ளது இதனால் உச்சமான பேச்சாற்றலும் தன்னை சூழ்ந்துள்ள சமூகத்தின் மீது ஆளுமையான மற்றும் தனித்துவமான பார்வையும் கொண்டவராக திகழ்ந்தார் மேலும் அதி உச்சமடைந்த சூரியனால் மிகவும் புகழ் பெற்ற எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.

 

ஒருவருக்கு எழுத்தாற்றல் நன்கு அமைய வேண்டுமென்றால் லக்னத்திற்கு 5  ஆம் வீடும் அதன் அதிபதி கிரகம் வலிமையாக அமைவது முக்கியமாகும் அந்தவகையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஜாதகத்தில் கடக லக்னத்திற்கு 5 ஆம் வீட்டின் அதிபதி அதாவது மந்திர தந்திர ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் 10 ஆம் வீடான பிரயோக ஸ்தானம் அதாவது செயல்திறமையாக ஒன்றை வெளிபடுத்துவதை எடுத்துகாட்டும் 10 ஆம் வீட்டின் அதிபதியாகவும் செவ்வாயே அமைந்து அந்த 10 ஆம் வீட்டிலேயே ஆட்சி பெற்றுள்ளார் அதுவும் செயல்வேகம், செயல்திறம், தன்னம்பிக்கை, கர்வமான அல்லது வீம்பான நடத்தை போன்றவற்றிற்கு அதிகார ராசியான மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி பெற்றுள்ளார் இதனால் எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது எழுத்து தொழிலில் திறம் பெற்றவராகவும் தன்னம்பிக்கை மற்றும் கர்வமான அல்லது வீம்பான நடத்தைக்கு பேர் பெற்றவராகும் மேலும் 5 ஆம் வீட்டின் அதிபதி 10 ஆம் வீட்டிலேயே ஆட்சி பெற்றதால் எழுத்துப்பணியான பத்திரிக்கை துறையில் தான் இளம் வயதிஙல் தனது வாழ்க்கை பணியை தொடங்கினார் மேலும் அந்த எழுத்துப்பணியால் தமிழ் உலகறிய பெற்றார். அரசர்கள் அடிமைத் தொழில் செய்வதில்லை எனவே சூரியன் மற்றும் செவ்வாய் பத்தாம் வீட்டில் அமைந்ததால் எந்த விதமான மற்றவரிடம் சம்பளம் பெறும் ஏவல் பணிகள் பல பல செய்தும் அவரால் அதை நிரந்தரமாக செய்ய முடியவில்லை காரணம் அரச கிரகங்கள் வலுத்தால் டிமைத் தொழில் செய்யவிடாது என்பது தான்.

 

எது ஒருவனை எழுத தூண்டுகிறது என்று பார்க்கும் போது ஒருவருக்குள் மிதம் மிஞ்சி எழுகின்ற அறிவுணர்ச்சி அந்த அறிவுணர்ச்சி அவர்களுக்கு பரந்த அளவில் இருக்கும் மேலும் அது ஒரு சம்பவத்தை மற்றவர் பார்க்கும் கோணத்திலும் பார்க்க முடியும் மற்றவர்கள் பார்க்காத  கோணத்திலும் பார்க்க முடியும் இப்படி அறிவுத்தன்மை கிடைப்பது அது ஆண்டவனின் கிருபையால் தான் நிகழ்கிறது ஏனென்றால் படைபாற்றல் என்பது ஒருவர் சொல்லிக் கொடுப்பதன் மூலமாக மட்டும் தோன்றிவிடுவதல்ல.  மேலும் நிறைய பரந்த அறிவாற்றல் பெற்றவர்கள் தான் எழுத முடியும் ஒன்று நிறைய புத்தகங்களை படித்திருந்து அதன் மூலமாக பரந்த அறிவாற்றல் பெற்றவராக இருக்க வேண்டும் அல்லது நிறைய வாழ்க்கை அனுபவங்களை பெற்று அதன் மூலமாக பரந்த அறிவாற்றல் பெற்றவராக இருக்க வேண்டும்  நிறைய புத்தகங்களை படித்திருந்து அதில் பரந்த அறிவாற்றல் பெற்றவராக இருக்க 4 ஆம் வீடும் சந்திரனும் பலம் பெற வேண்டும் அதே போல  நிறைய வாழ்க்கை அனுபவங்களை பெற்று அதில் பரந்த அறிவாற்றல் மற்றும் அறிவு ஆழம் பெற்றவராக இருக்க 9 ஆம் வீடும் குருவும் பலம் பெற வேண்டும் எழுத்தாளர் ஜெயகாந்தன் ஜாதகத்தில் 4 ஆம் வீடும் சந்திரனும் சற்று சுமாரான பலம் தான் அதனால் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பு அவருக்கு சரியாக அமையவில்லை ஆனால் 9 ஆம் வீடும் மற்றும் குரு கிரகமும் நன்கு பலத்துடன் அமைந்துள்ளார் அதாவது  குரு கிரகம் 3 ஆம் வீட்டில் இருந்து தனது சொந்த வீடான 9 ஆம் வீட்டை 7ஆம் பார்வையாக பார்வை செய்யும் பலம் ஏற்பட்டுள்ளது மேலும் 9 ஆம் வீட்டதிபதி குரு கிரகத்திற்கும் 3 ஆம் வீட்டதிபதி புதன் கிரகத்திற்கும் பரிவர்த்தனை யோகம் ஏற்பட்டுள்ளது

 

இந்த வக்கிர குரு மற்றும் புதனின் பரிவர்த்தனை யோகத்தால் வித்தியாசமான பலன் உண்டாகும் அதாவது நடைமுறைப்படியுள்ளதில் முறைப்படியில்லாததை பார்க்கும் குணமும் அறிவும்  முறைப்படியில்லாததில்  முறைப்படியுள்ளதை பார்க்கும் குணமும் அறிவும் இவருக்கு தோன்றும், இப்படி ஏற்பட்ட பரிவர்த்தனை யோகம் உள் அறிவாற்றல் வெளி அறிவாற்றல் கிரகங்கள் ஆன குருவுக்கும் புதனும் ஆக அமைந்ததால் உறவுகளை சமுதாயத்தை  மனிதத்தை அகம் புறம் என வித்தியாசமாக பார்க்கும் குணமும் அறிவும் ஏற்பட்டுள்ளது, இவரிடம் இருந்த இந்த திறம் ஏற்கெனவ பார்த்த எழுத்தாற்றல் திறனோடு சேர்ந்து உயரிய நாவல்களை படைக்க வாய்ப்பாக அமைந்துள்ளது. இப்படிபட்ட புதன் நீசபங்க ராஜயோகத்தை  குரு வீட்டில் அமைந்து அந்த குரு பகவானாலே பார்க்கபட்டதால் நீசபங்க ராஜயோகம கிடைத்தும் மேலும் இரு கிரகங்கள் தங்கள் தங்கள் சுய ராசியை பார்வை செய்வதால் வரும் பலமும் சேர்ந்து இவர் ஜாதகத்தில் அமைந்துள்ளது.

 

23 வயதிலேயே அதிஉச்ச பாகையில் அமைந்த சூரியனின் திசா தொடங்கிவிட்டது அதாவது 1957 ஆம் ஆண்டில் உச்ச பெற்ற சூரிய திசையில் ஜெயகாந்தன் அவரது இலக்கிய வாழ்க்கையை தொடங்கினார். பல்வேறு தினசரி மற்றும் மாத நாளிதழ்களில் அவரது படைப்புகள் வெளியாயின மேலும் தனி நாவல்களாகவும் வெளிவந்தன. ஜெயகாந்தனின் முதல் நாவல் வாழ்க்கை அழைக்கிறது 1957 ஆம் ஆண்டில் தான் வெளிவந்தது என்பது இவரது உச்ச பெற்ற சூரிய திசையின் பலத்தை அறியலாம் 1963 வரை சூரிய திசை இருந்தது அதற்கு பிறகு வந்த ஆட்சி பெற்ற சூரியனின் ராசிக்குள் மகம் நட்சத்திரத்தில் அமர்ந்து திசையை நடத்திய சந்திர திசையின் பத்து வருடம் இந்த காலங்களில் தான் இவரது எழுத்தாளுமை பெற்ற படைப்புகள் வெளிவந்தன, இவரது படைப்புகளனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அவருக்குப் மேலும் மேலும் புகழும், அவரது படைப்புகளுக்கு அங்கீகாரமும் கிடைத்தது. இதனால், அவர் தலைச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். ந்த புகழ் இவரது வாழ்வின் அந்திம காலம் வரை இருந்தது என்பது தான் இவரின் சிறப்பு.
- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
ஜோதிஷ் சிவதத்துவ சிவம் - எம்மிடம் உங்களின் சோதிட பலன்களை பெற நீங்கள் உங்களின் பிறந்த விவரங்கள்...

காற்று, நீர், ஆகாய பஞ்சபூதத்தின் தன்மை கொண்ட கிரகங்கள் வலுகுறைந்தால் வரக் கூடிய அடிப்படை பலன்...

காற்று, நீர், ஆகாய பஞ்சபூதத்தின் தன்மை கொண்ட கிரகங்கள் வலுகுறைந்தால் வரக் கூடிய அடிப்படை பலன்...

நெருப்பு மற்றும் நிலம் பஞ்சபூதத்தின் தன்மை கொண்ட கிரகங்கள் வலுகுறைந்தால் வரக் கூடிய அடிப்படை பலன்...

நெருப்பு மற்றும் நிலம் பஞ்சபூதத்தின் தன்மை கொண்ட கிரகங்கள் வலுகுறைந்தால் வரக் கூடிய அடிப்படை பலன்...

கடக ராசி ஆண் - நீங்கள் கடக ராசி ஆணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை...

கடக ராசி ஆண் - நீங்கள் கடக ராசி ஆணா உங்களின் பொதுவான குணம், சுபாவம், ஆசை, மனக்கருத்து ஆகியவற்றை...

சூரிய கரும்புள்ளி, வியாழனின் சிவப்பு புள்ளி மற்றும் சனியின் வெள்ளைப் புள்ளி பற்றி பார்க்கலாம்...

 

சூரிய கரும்புள்ளி, வியாழனின் சிவப்பு புள்ளிற்றும்  சனியின் வெள்ளைப் புள்ளி பற்றி பார்க்கலாம்...

 

ஜோதிடத்திற்கும் இந்த கிரகங்களில் உள்ள தோற்றப் புள்ளிகளுக்கும் தொடர்புகள் உண்டு ஆனால் அந்த தொடர்பை பற்றிய விரிவான தகவல்கள் ஜோதிட நூல்களில் காணக்கிடைப்பதில்லை அரிதாகவே உள்ளது இருந்தாலும் வானவியல் கண்டுபிடிப்பின் படி இந்த தோற்றப் புள்ளிகள் பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம் : - 

 

 

சூரிய கரும்புள்ளி -

சூரிய ஒளியின் வழியாகவே அனைத்து கோள்களின் இருப்பை உண்ர்கிறோம் அந்த சூரியன் ஒளிபிழம்பாக பல்லாயிரம் கதிர்களால் வெளிச்சத்தின் வெள்ளத்தை வானவெளியெங்கும் பாய்ச்சிக்கொண்டிருக்கிறது அந்த சூரியனின் மேல்சுற்றில் இருட்டாகத் தோன்றும் பகுதிகளை தான் சூரிய கரும்புள்ளி  என்று வானிவியல் உலகம் அழைக்கிறது, இந்த சூரியகரும்புள்ளிகள் ஏன் ஏற்படுகின்றன என்று பார்க்கும் போது சூரியனின் மேற்பரப்பின் மற்ற பகுதிகளை விட வெப்ப மற்றும் ஒளி உமிழ்வு இந்த பகுதிகளில் குறைவாக இருக்கும் அதாவது மிக அதிகமான ஒளியை உமிழும் பகுதிக்குள் குறைந்த உமிழும் பகுதி இருந்தால் சுற்றி உள்ள  அதிகமான ஒளியை உமிழ்வு நடுவில் உள்ள குறைந்த உமிழும் பகுதி இருண்ட தோற்றத்தை போலியாக அடையும் உண்மையில் சூரியப்புள்ளிகளின் வெப்பநிலை கிட்டத்தட்ட 2700 முதல் 4200 °C ஆக இருந்தாலும், இவற்றின் சுற்றுப்புறங்களில் அதிகமாக உள்ள வெப்பநிலை 5,500 °C மேலாக இருப்பதால் இவை கருமையாகத் தோன்றுகின்றன, இதற்கு காரணம் என்ன என்று பார்க்கும் போது சூரியனின் மேற்பரப்பில் திரளும் காந்தப்புலம் வலுவான காந்தப்புலமாக மாறி மிகுந்த காந்த அழுத்தத்தை சூரியனின் மேற்பரப்பில் உண்டாக்குகின்றன சூரியனின் மேற்பரப்பில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அதிகமான செறிவடைந்த காந்த அழுத்தம் அங்கு உள்ளதால் அது சூரியனின் உட்புறத்திலிருந்து மேற்பரப்புக்கு எழுந்து வரும் வெப்பமான புதிய வீச்சை தடுக்கிறது அதனால் சுற்றுப்புறங்களுடன் ஒப்பிடும்போது அங்கு வெப்பநிலையைக் குறைக்கிறது இதனால் சூரியகரும்புள்ளி தோன்றுகிறது. இந்த சூரியகரும்புள்ளி உள்ள காந்தப்புலம் என்பது பூமியிலுள் காந்தப்புலத்தை விட 2,500 மடங்கு வலிமையானது எனவே மற்ற கோள்களிலும் இந்த காந்தபுலம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது நமது பூமியிலும் இது தாக்கத்தை ஏற்படுத்துக்கிறது . pratyātāpa (प्रत्याताप, ப்ரயாத்பா).

 

வியாழனின் சிவப்பு புள்ளி -

வியாழனின் சிவப்பு புள்ளி என்பது பூமியை விட இரண்டு மடங்கு அகலமுள்ள ஒரு பிரம்மாண்டமான புயலாகும் இது வியாழன் என்ற குரு கிரகத்தை அதன் தெற்கு அரைக்கோளத்தில் சுற்றி வருகிறது. இந்த புயலின் மையத்தில் காற்று ஒப்பீட்டளவில் அமைதியானது தான் ஆனால் அதன் விளிம்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 430-680 கிமீ அடையலாம் இது பூமியின் வலிமையான சூறாவளிகளின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். புயல் அதன் வடக்கே கிழக்கு நோக்கி நகரும் வளிமண்டல சுழலாகவும் மற்றும் அதன் தெற்கே மேற்கு நோக்கி நகரும் வளிமண்டல சுழலாகவும் உள்ளது, இது உருவாக காரணம் வியாழனின் நிகழும் சுழலும் பட்டைகள் காரணம் இப்படி உருவான் இந்த சிவப்பு புயல் நூற்றாண்டுகளுக்கும் மேலாக புயலாக சுழன்று கொண்டிருக்கின்றது. ஏன் இந்த புயல் அடங்கவில்லை என்று கேட்க படும் போது வியாழனுக்கு திடமான மேற்பரப்பு இல்லை என்பது தான் பதில் சூறாவளிகள் திடமான நிலத்தை அடையும் போது மெதுவாகின்றன அப்படி இல்லாத பட்சத்தில் புயல் மேலும் வலுவடைந்து சுழல்கின்றன ஆனால் இந்த புயலின் மேற்பரப்பு விரிந்து சுருங்கும் தன்மை கொண்டதாக உள்ளது, இந்த புயல் அம்மோனியா, அம்மோனியம் ஹைட்ரோசல்பைட் நீராவியால் ஆன மேக அடுக்குகளாக இருக்கலாம் இதுவே இதன் சிவப்பு நிறத்தின் ஆதாரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது, இந்த புயலின் உயர்ந்த மின்னாற்றலால் இந்த புயலுக்கு மேலே மிக உயர்ந்த வெப்பநிலை ஆற்றல் பெற்றிருக்க காரணமாவதாக கருதப்படுகிறது, இந்த வியாழனின் சிவப்புபுள்ளியை ஜோதிடத்தில் சிவப்பு கலங்கம் என்ற ஒரு வார்த்தையால் அழைக்கபடுவதை நான் வாசித்திருக்கிறேன்.

 

சனியின் வெள்ளைப் புள்ளி -

பிரகாசமான வெளிர் சிவப்பான சூரியனுக்குள் கரும்புள்ளி அமைந்தது போல் சாம்பல் நிறமான சனி கிரகத்தில் வெள்ளைநிறத்தில் காணப்படுவதை சனியின் பெரிய வெள்ளைப் புள்ளி என்று அழைக்கிறார்கள், இது ஒவ்வொரு 20 அல்லது 30 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியை விட பெரிய ஒரு புயல் சனியின் மேற்பரப்பு வளிமண்டலத்தில் பெரிய இடிகளுடன் கூடிய மழை மற்றும் தீவிர மின்னல் மற்றும் பெரிய மேகக் கலக்கங்களை உருவாக்குகிறது இது பிரமாண்டமான சுழலாக சனியின் மேற்பரப்பில் சுற்றும் இதை தான் "பெரிய வெள்ளை புள்ளிகள்" என்று அழைக்கப்படுகின்றனர், இதுவும் வியாழனின் பெரிய சிவப்பு புள்ளிக்கு ஒப்பானது தான் ஆனால் வியாழனின் சிவப்பு புயலானது மையத்தில் அமைதியாகவும் மேற்பரப்பில் மின்னல் இல்லாத்தாக இருக்கும் சனியின் இந்த வெள்ளை புயலோ மையத்தில் வலுவானதாக உள்ளன மற்றும் நீண்ட வால்களைக் கொண்டு அமைந்து சனி கிரகத்தை தண்ணீரில் மிதக்கும் எண்ணெயைப் போல வலம் வருகின்றன, சனியின் வடக்கு அரைக்கோளம் சூரியனை நோக்கி மிகவும் சாய்ந்திருக்கும் போது பெரிய வெள்ளை புயல்கள் ஏற்படுகின்றன. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியத்துடன் கூடிய பெரிய வாயுக் கோளான சனியில் இத்தகைய வாயுக்களின் குளிரூட்டல் மற்றும் அடக்கப்பட்ட வெப்பச்சலனத்தால் சூடான ஈரமான காற்று விரைவாக உயர்ந்து இடியுடன் கூடிய மழையைத் தூண்டுகிறது. இந்த புயல் மிகப் பெரியதாகும் சுமார் 11,000 மைல்கள் (17,000 கிலோமீட்டர்) பரப்பளவில் வடக்கு-தெற்கு ஆக அலை அலையான கட்டமைப்பாக வலம் வரும், மேலும் சனி மிகப்பெரிய வளிமண்டலத்தைக் கொண்டிருப்பதால் குளிரூட்டல் மற்றும் அடக்கப்பட்ட வெப்பச்சலனத்தால் சூடான ஈரமான காற்று புயலாக மாற பல ஆண்டுகள் எடுக்கும் மேலும் இந்த பெரிய வெள்ளை புயலும் பல ஆண்டுகள் சனி வளிமண்டலத்தில் சஞ்சாரம் செய்யும்.

 

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
ஜோதிஷ் சிவதத்துவ சிவம் - எம்மிடம் உங்களின் சோதிட பலன்களை பெற நீங்கள் உங்களின் பிறந்த விவரங்கள்...

 


சூரியன் 12 ராசிகளில் அமரும் போது நான் என்ற மூல வார்த்தை அவர்கள் பேச்சில் எந்த மாதிரி வார்த்தைகளாக...

சூரியன் 12 ராசிகளில் அமரும் போது நான் என்ற மூல வார்த்தை அவர்கள் பேச்சில் எந்த மாதிரி வார்த்தைகளாக...

Powered by Blogger