இந்திய பங்குச்சந்தைகளை தாக்கி உள்ள கொரானோ வீழ்ச்சி எப்போது முடியும்… When will India's Share Market Downtrend Stop in Tamil...


இந்திய பங்குச்சந்தைகளை தாக்கி உள்ள கொரானோ வீழ்ச்சி எப்போது முடியும்

இந்திய பங்குச்சந்தைகள் தனது உச்சத்தில் இருந்து சுமார் 40 சதவீத மதிப்பு விலை வீழ்ச்சியை  கண்டு உள்ளன, இந்திய பங்குச்சந்தைகள் சுமார் 4 வருடங்களுக்கு ஒரு முறை சிறிய Correction ஆகும் 8 வருடங்களுக்கு ஒரு முறை பெரிய Correction என்று சொல்லக்கூடிய நிலைதிருத்தம் ஏற்படும் என்று பொதுவாக சொல்லுவார்கள் அதாவது 2000 த்தில் கண்ட வீழ்ச்சி 2004 க்கு மேல் தான் அதன் போன உச்சத்தை தாண்டியது, 2008 ல் கண்ட பெரிய வீழ்ச்சி 2012 க்கு மேல் தான் அதன் போன உச்சத்தை தாண்டியது, 2016 ல் கண்ட சிறிய வீழ்ச்சி 2017ல் ஒரு வருடத்திற்குள்ளேயே அதன் போன உச்சத்தில் இருந்து மீண்டது எனவே இரண்டு வருடம் இருக்க வேண்டிய Correction செயல்பாடு  ஒரு வருடத்திற்குள்ளேயே முடிந்து விட்டதால் இந்திய பங்குச்சந்தை பெரிய Correction (நிலைதிருத்தம்) ஆக காத்துக் கொண்டிருந்தது அதற்கு உகந்த சமயமாக இந்த கொரானோ வைரஸின் தாக்கம் மற்றும் அதன் பின்விளைவாக உலக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள கடும் தாக்கமும் இந்திய பங்குச்சந்தை பெரிய Correction (நிலைதிருத்தம்) ஆகும் சமயமாக அமைந்து போய் உள்ளது.

தற்சமயம் 14-Jan-2020 அன்று தேசிய பங்குச்சந்தை தனது உச்ச அளவை அடைந்தது அதாவது 12362 எண் மதிப்பை அடைந்தது அதில் இருந்து தற்சமயம் 23-Mar-2020 அன்று 7610  என்ற எண் மதிப்பு வீழ்ச்சியை சந்தித்துள்ளது இந்த Correction என்பது சுமார் 38 சதவீத Correction ஆகும். ஏற்கெனவே இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் இருந்தது அத்துடன் இந்த கொரானோ வைரஸின் தாக்கம் மற்றும் அதன் பின்விளைவாக இந்திய நாட்டில் எடுக்கபடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவை அனைத்தும் இந்திய பொருளாதார நிலையை மேலும் சரித்துள்ளது, மேலும் உலக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள கடும் தாக்கம் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகத்தையும் மேலும் பாதிக்கலாம், அத்துடன் இந்தியாவுக்கு வெளியே தங்கி வேலை செய்யும் இந்தியர்களின் வருமான வரவுகள் பாதிக்கும், மேலும் இந்தியாவிற்குள் பெரும்பாலான மக்களின் வேலைகள் தடைபட்டு போய் உள்ளதால் ஏற்படும் உள்நாட்டு உற்பத்தி குறைபாடு மற்றும் இந்தியர்களின் செலவு செய்யும் போக்கில் அத்தியாவசியமான பொருட்களே முதன்மையாக இடம் பெறும் அத்தியாவசியமற்ற பொருட்கள் தவிர்க்கபடும் இவை அனைத்தும் சேர்ந்து இந்திய பெரு நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

2000 த்தில் உச்சத்தில் இருந்த சந்தை வீழ்ச்சி காண ஆரம்பித்த போது கிரக நிலைகள் - 

2004 ல் பங்குச்சந்தை உச்சத்தில் இருந்த போது  கிரக நிலைகள் - 
2008 ல் உச்சத்தில் இருந்த சந்தை வீழ்ச்சி காண ஆரம்பித்த போது கிரக நிலைகள் -
2008 ல் பங்குச்சந்தை ஏற்பட்ட கடும் வீழ்ச்சி முடிந்து 2009 ஏற்றம் ஆரம்பித்த போது கிரக நிலைகள் - 
2016 ல் கண்ட சிறிய வீழ்ச்சி கிரக நிலைகள் -  
2016 ல் கண்ட சிறிய வீழ்ச்சி 2017ல் ஒரு வருடத்திற்குள்ளேயே அதன் போன உச்சத்தில் இருந்து மீண்டது அதற்கு பிறகு பெரிய Correction ஆகாமல் Jan-2020 அன்று தேசிய பங்குச்சந்தை தனது உச்ச அளவை அடைந்தது  தனது உச்ச மதிப்பை அடைந்த போது கிரக நிலைகள் -
 
1998 ல் இருந்து பங்குச்சந்தையின் பெரிய ஏற்றம் மற்றும் பெரிய இறக்கங்களை கிரகநிலை ஆய்வுகளாக செய்து வைத்திருக்கிறேன் அதன் படி பார்க்கும் போது கொரானோ வைரஸின் தாக்கம் மற்றும் அதன் பின்விளைவாக உலக பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள கடும் தாக்கமும் இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டுள்ள பெரிய Correction (நிலைதிருத்தம்) முடிய நீண்ட காலம் எடுக்கலாம் சரி இனி என்ன ஆகலாம் எச்சரிக்கையாக கவனிக்க வேண்டியவை என்ன என்ன வரிசையாக பார்க்கலாம்


1) ஒரு சில நிறுவனங்களின் வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை போன்றது அல்ல இப்போது பங்குசந்தையில் ஏற்பட்டிருக்கும் விலை வீழ்ச்சி விளைவு.
2)  ஒரு சில குறிபிட்ட துறையை சார்ந்த பல நிறுவனங்களின் வீழ்ச்சியால் நாட்டில் ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற பொருளாதார பின்னடைவு நிலை போன்றது அல்ல இப்போது பங்குசந்தையில் ஏற்பட்டிருக்கும் விலை வீழ்ச்சி விளைவு.

3) அரசியல் மற்றும் அரசாங்க ஸ்திர தன்மை அற்ற போதோ அல்லது ஒரு சில நாட்டின் போர்களால் ஏற்படும் சூழ்நிலைகளால் ஏற்படும் பொருளாதார பின்னடைவு நிலை போன்றது அல்ல இப்போது பங்குசந்தையில் ஏற்பட்டிருக்கும் விலை வீழ்ச்சி விளைவு.

4) இது அசாதாரணத்திலும் அசாதாரணமான extraordinary abnormal சூழ்நிலையால் ஏற்பட்டுள்ள பங்குசந்தை வீழ்ச்சி ஆகும் பல நாட்டு பொருளாதாரம் மற்றும் அதன் பெரு நிறுவனங்களின் நிதிநிலைமைகளை, வரவு செலவு கணக்குகளை புரட்டி போடும் மாற்றங்களை செய்ய காத்திருக்கும் பொருளாதார சூழ்நிலை ஆகும்.

5) எனது கணிப்பின் படி கொரோனா வைரஸின் தாக்க வீரியம் முடியும் காலம் 07-07-2020 அன்று தமிழ் தேதி ஆனி 23 க்கு பிறகு தான் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமான அளவில் குறைய தொடங்கும்  விரிவான பதிவை இந்த லிங்கில் காணலாம் - http://www.jodhishsivam.com/2020/03/blog-post_15.html

6) மேலும் எனது கணிப்பின் படி இந்த கொரோனா வைரஸால் இறப்பு அதிக பட்ச ஐந்து இலக்க எண்ணை தொடலாம் மேலும் கொரோனா வைரஸின் தாக்க வீரியம் உலகின் முக்கிய முன்னேறிய பொருளாதார நாடுகள் ஆன சில ஐரோப்பா நாடுகள், யுனைடெட் ஸ்டேட்ஸ் அமெரிக்கா (USA இறப்பு எண்ணிக்கை 1000 தொட்டுள்ளது), சீனா போன்ற பிரதேசங்களை கடுமையாக தாக்கலாம்.

7) அதன் படி 07-07-2020 அதற்கு மேல் கொரோனா வைரஸின் தாக்கம் கணிசமான அளவில் குறைய தொடங்கினாலும் அதன் பின்விளைவால் உலக பொருளாதார பின்னடைவு நிலை என்பது உடனே முடிந்து விடாது மேலும் நிறுவனங்களின் வருவாய் ஈட்டும் அளவின் உயர்வு என்பதும் உடனே அதிகரித்து விடாது.

8) July-2020 கடைசி இரண்டு வாரங்களில்  மற்றும் ஆகஸ்ட் முதல் வாரம் பங்குச்சந்தை வர்த்தக விவரங்களை மிகவும் கவனமாக கவனித்தே செய்ய வேண்டும். கொரோனா வைரஸால் ஏற்படும் நோயிற்கு நிரந்தர தீர்வு தீர்க்கமான தீர்வு ஏற்படும் வரை வதந்திகளை நம்பியோ அல்லது முழு பயன்தராத செய்திகளை நம்பியோ பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் போது மிக ஏற்ற இறக்கமான சூழ்நிலைகளை மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு அணுக வேண்டும். அந்த சமயத்தின் சூழ்நிலைகளை அறியாத நபர்கள் சற்று விலகியிருந்து கூட நிலைமைகளை கண்காணிக்கலாம்.

8) வீழ்ச்சி அலையின் முதல் பரிமாணமே இப்போது முடிந்துள்ளது பெரும் வீழ்ச்சி அலைகள் முடிவில் உடனடியாக சம அலைகளாகவோ அல்லது ஏற்ற அலைகளாகவோ உருவாகிவிடாது, சில ஏற்ற அலைகளை காட்டலாம் ஆனால் அது ஸ்திரமான ஏற்றம் ஆகாது எனவே வீழ்ச்சி அலையின் முதல் பரிமாணம் தான் இப்போது முடிந்துள்ளது இன்னும் இரண்டு அல்லது மூன்று பரிமாணங்கள் பாக்கி இருக்கலாம்.

9) 2008 ன் பெரும் வீழ்ச்சியை கணிக்கில் கொண்டு பார்த்தால் தற்போது ஏற்பட்டுள்ள இந்திய தேசிய பங்குச்சந்தை (NSE) பெரும் வீழ்ச்சி என்பது இரண்டு தடுப்புகள் தடுத்து நிறுத்தபடலாம்

10) இந்திய தேசிய பங்குச்சந்தை (NSE) முதல் தடுப்பு 6000 to 6100 வரை உள்ளது இரண்டாம் தடுப்பு 4500 ல் உள்ளது. சூழ்நிலை இன்னும் மோசமானால் இரண்டாம் தடுப்பு வரை சந்தை மதிப்பு போகலாம்.

11) 03-01-2021 வரை இந்திய பங்குச்சந்தைகளுக்கு downtrend (சரிவுப் போக்கு)  இருக்கலாம்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

Powered by Blogger