கொரானாவின் பின்விளைவு - படிப்பு மற்றும் படிப்பின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தக்கூடிய சகஜ நிலை திரும்புவதற்கான…

கொரானாவின் பின்விளைவு - படிப்பு மற்றும் படிப்பின் மீது மாணவர்கள் கவனம் செலுத்தக்கூடிய சகஜ நிலை திரும்புவதற்கான…

 



கொரானாவின் நோய் தாக்கத்தின் முக்கிய பின்விளைவாக அடுத்து நாம் பார்க்க இருப்பது மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட வாய்ப்புள்ள சிக்கலாக இருப்பது அதாவது படிப்பின் மீது மாணவர்கள் மற்றும் குழந்தைகள் கவனம் செலுத்தக்கூடிய சகஜ நிலைமை திரும்புவதற்கு மிகுந்த சிரமமாக இருக்கலாம் ஏனென்றால் நிறைய மாணவர்கள் மற்றும் குழந்தைகள் இந்த கொரானா காலத்தில் தொலைகாட்சிகள், செல்போன்கள் மற்றும் உட்புற விளையாட்டுகள் போன்றவற்றில் கவனத்தை செலுத்தி செலுத்தி பழகி உள்ளார்கள் அவர்களை உடனடியாக பள்ளி பாடத்தின் மீது கவனத்தை செலுத்த சொல்லுவது அவர்களுக்கு சிரமத்தை தரலாம் ஆசிரியர்களுக்கும் சிரமத்தை தரலாம் மற்றும் தொடர்ந்து படித்தால் மட்டுமோ நினைவிலிருக்கும் கல்வி பாடங்கள் பல உள்ளது அவற்றை கொஞ்ச காலத்திற்கு விட்டு விட்டு மறுபடியும் தொடர்வதும் மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிரமமாக இருக்கலாம் மேலும் தங்களின் பள்ளி வாழ்க்கை அதன் நண்பர்களை விட்டு வெகுகாலத்திற்கு தள்ளி இருந்த மாணவர்கள் மனரீதியாக தங்களின் பள்ளி நண்பர்களை சந்தித்து ஒருவருக்கு ஒருவர் மனரீதியாக சகஜமாக பழகும் நிலைமை தோன்றவும் குறிப்பிட்ட காலம் எடுக்கலாம்.

 

இப்படிபட்ட நிலையில் மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தங்களின் பள்ளி பாடத்தில் கவனத்தை செலுத்துவது தொடர்பாகவே பேச உள்ளேன் சார் இதெல்லாம் சரி சார் இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு கேட்க தோன்றலாம் அதாவது இந்த வீடியோ பதிவின் முக்கிய நோக்கமாக இருப்பது தங்களின் ஜாதக பலத்தால் சில மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தங்களின் கல்வி பாடத்தின் மீது உடனடியாக கவனத்தை செலுத்தும் திறனும் மற்றும் அதே போல உடனடியாக தங்களின் பள்ளி பாடத்தில் முன்னேற்றம் அடையும் திறமையும் வாய்க்க பெற்று இருக்கலாம் மற்றும் ஞாபக சக்தி இருக்கலாம் ஆனால் பல மாணவர்கள் மற்றும் குழந்தைகள் படிப்படியாகவோ அல்லது மந்தமாகவோ தங்களின் பாடத்தில் கவனம் செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள் அது போன்ற மாணவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு  இது போன்ற காலங்களில் சமூகமும் மற்றும் குடும்பமும் உறுதுணையாக இருந்து அவர்களின் படிப்பை ஆதரவோடு கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் முகமாக இந்த பதிவை தருகிறேன்.

 

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் குரு பகவான், சந்திர தேவன் மற்றும் முக்கியமாக புதன் பகவான் ஆகிய கிரகங்களின் வலிமையை கொண்டு ஒருவருடைய கல்வி ஆற்றலை மற்றும் மன ஆற்றலை அறிகிறோம் மேலே சொன்ன கிரகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் கல்விமான் என்று சிறப்பு பெயர் பெற்ற கிரகங்கள் ஆகும் இந்த கிரகங்கள் மாணவர்களின் கல்வி ஆற்றலை மற்றும் மன ஆற்றலை எடுத்து காட்டுவதாக அமைகிறது மேலே சொன்ன கிரகங்கள் ஒரு மாணவருடைய ஜாதகத்தில் சுப வலிமையோடு சிறப்பாக அமைந்தால் அதாவது குரு பகவான், சந்திரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் ஆட்சி, உச்சம், நட்பு பலம் மற்றும் சுப கிரக சேர்க்கை மற்றும் சுப அவஸ்தைகளை அடைதல், மேலும் ஷட்பல வலிமைகளில் மீதி உள்ள திக் பலம், கால பலம், சேஷ்ட பலம் போன்றவை அடைந்து அமைந்திருந்தாலும் அத்துடன் அப்படி பலமடைந்த கிரகங்களின் திசா புத்தி காலங்கள் அந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வில் நடந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் இந்த கொரானாவிற்கு பின்னான பள்ளி காலங்களில் தங்களின் பள்ளி படிப்பில் மற்றும் பாடத்தின் மீது செலுத்தும் கவனத்தில் மற்றும் கற்ற பாடத்தில் ஞாபக சக்தியை மீட்டு எடுக்கும் திறனில் எப்படியாவது சமாளித்து மேல் ஏறி வந்து விடுவார்கள்.

அதே போல பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவருடைய ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளில் கல்விக்கு உடல்ரீதியாக பார்த்தால் லக்னம் மற்றும் 2 ஆம் வீடும் முக்கியமான ஸ்தானங்கள் ஆகும் அது போல மனரீதியாக பார்த்தால் 4 ஆம் மற்றும் 5 ஆம் வீடும் முக்கியமான ஸ்தானங்கள் ஆகும் மேலே சொன்ன ஸ்தானங்களில் மனரீதியான ஆற்றலை தரும் ஸ்தானங்களான 4 ஆம் மற்றும் 5 ஆம் வீடும் மற்றும் அவற்றின் அதிபதி கிரகங்களும் ஆட்சி, உச்சம், நட்பு பலம் மற்றும் சுப கிரக சேர்க்கை மற்றும் சுப அவஸ்தைகளை அடைதல், மேலும் ஷட்பல வலிமைகளில் மீதி உள்ள திக் பலம், கால பலம், சேஷ்ட பலம் போன்றவை அடைந்து அமைந்திருந்தாலும் உடன் 4 ஆம் மற்றும் 5 ஆம் வீடும் சுப கிரங்களின் சேர்க்கை பார்வை மற்றும் சுப கிரங்கள் எதேனும் ஒரு விதத்தில் வலுவாக இருந்து அத்துடன் அப்படி பலமடைந் த ஸ்தானங்களின் கிரகங்களின் திசா புத்தி காலங்கள் அந்த மாணவர்கள் மற்றும் குழந்தைகள் வாழ்வில் நடந்து கொண்டு இருந்தாலும் அவர்கள் இந்த கொரானாவிற்கு பின்னான பள்ளி காலங்களில் தங்களின் பள்ளி படிப்பில் மற்றும் பாடத்தின் மீது செலுத்தும் கவனத்தில் மற்றும் கற்ற பாடத்தில் ஞாபக சக்தியை மீட்டு எடுக்கும் திறனில் எப்படியாவது சமாளித்து மேல் ஏறி வந்து விடுவார்கள்.

 

ஆனால் மேலே சொன்ன கிரகங்கள் மற்றும் ஸ்தானங்கள் ஒரு மாணவருடைய ஜாதகத்தில் சுப வலிமையோடு அமையாமல் போனாலோ அல்லது அசுப வலிமையோடு அமைந்திருந்தாலும் அல்லது மிதமான சுப வலிமையோடு அமைந்திருந்தாலும் அப்படிபட்ட மாணவர்கள் தங்களின் படிப்பில் பாடத்தில் கவனத்தை மற்றும் கற்ற பாடத்தில் ஞாபக சக்தியை மீட்டு எடுக்க சிரம படலாம், எனவே அப்படிபட்ட மாணவர்களை அவர்களின் கவன மற்றும் ஞாபக சக்தியின் நிலையை பொறுத்து அவர்களை பக்குவமாக கையாண்டு பெற்றோர்கள், ஆசிரியார்கள் மற்றும் அரசாங்க சமூக சூழ்நிலைகளை உருவாக்கும் கல்வியாளர்கள் அந்த  மாணவர்களின் மனநிலைகள் புண்படாதவாறு அவர்களை கல்வியில் மறுபடியும் பழைய நிலைகளுக்கு கொண்டு வர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

 


வேலைவாய்ப்பின்மை நிலைமையின் காரணம், வேலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ள நபர்கள், சுதேசி பொருளாதாரம் மலர வேண்டியது காலத்தின் தேவை….

வேலைவாய்ப்பின்மை நிலைமையின் காரம், வேலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ள நபர்கள், சுதேசி பொருளாதாரம் மலர வேண்டியது காலத்தின் தேவை…. [The reason of the unemployment situation. Persons who are likely to be unemployed. The Indian native economy needs to blossom]


கொரானாவின் தாக்கம் உலக நாடுகள் மற்றும் இந்திய நாட்டிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது உயிர் இழப்புகள் உலக அளவில் 5 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது, இந்திய அளவில் பார்க்கும் போது 20 ஆயிரத்தை கடந்து போகிறது, கொரானா தொற்று நோயின் தாக்கங்களை பற்றி எமது வலைதளத்தில் மார்ச் மாதத்திலேயே முக்கிய இரண்டு ஜோதிட கட்டுரைகளை வழங்கி இருந்தேன் அதில் ஜூலை மாதம் வரை கொரானா தொற்று நோயின் தாக்கம் uptrend ல் அதாவது ஏற்ற போக்கில் தான் இருக்கும் என்று மார்ச் மாதத்திலேயே கூறியிருந்தேன் இனி வருகிற ஆகஸ்ட மாதத்திற்கு பிறகு அதாவது உலக மக்கள் இந்த பிரச்சினையிலிருத்து தப்பி உயிர்வாழும் சக்திக்கான அந்த மருந்தையோ அல்லது தடுப்பு ஆற்றலையோ அடைவார்கள் என்று கூறியிருந்தேன்.

 

கொரானாவின் தாக்கத்தால் மக்கள் அவதிபட்டுக்கொண்டிருந்த காரணத்தால் கடந்த மூன்று மாதங்களாக எந்த ஜோதிட பதிவுகளையும் கொடுக்க எனது மனம் உடன்படவில்லை இனி வரும் காலங்களில் கொரானாவின் தாக்கம் குறையலாம் என்று கருதி இனி ஜோதிட பதிவுகளை கொடுக்கலாம் என்று கருதுகிறேன். கொரானா நோயின் தாக்கத்தால் மனிதர்களின் உடல்நலம் மட்டும் சரிந்து கிடக்கவில்லை நம் நாட்டின் பொருளாதாரமும் சரிந்து தான் கிடக்கிறது அதன் விளைவாக நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

 

இந்தியர்களின் அதிகபட்ச இறக்குமதியும் இதற்கு ஒரு காரணமாக தெரிகிறது முக்கிமாக நம் நாட்டிற்கு வேலை வாய்ப்பை தரும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் துறையினரின் உற்பத்தி பொருட்களை இந்திய சந்தையில் சீன தேசத்தினர் நம்மை விட மலிவு விலைக்கு விற்பதாக சொல்லி அதே பொருட்களை சீனாவில் தயாரித்து நமது சந்தையில் விற்று இந்தியாவின் நடுத்தர மற்றும் மித பணக்கார வர்க்கத்தினரின் பணத்தை தங்களின் நாட்டிற்கு நீண்ட காலமாக கொண்டு சென்று வருகின்றனர் அதனால் இந்தியாவின் நடுத்தர மற்றும் மித பணக்கார வர்க்கத்தினரிடம் பணப்புழக்கம் குறைந்துவிட்டது, இந்தியர்களிடம் பணப்புழக்கம் குறைந்தால் பொருட்களை வாங்கும் சக்தி குறையும் பொருட்களை வாங்கும் சக்தி குறைந்தால் உற்பத்தி குறையும் உற்பத்தி குறைந்தால் வேலையின்மை விகிதம் அதிகரிக்கும், ஆங்கிலேயர்கள் ஆக்கிரமித்திருந்த காலத்தில் சுதேச பொருட்களை வாங்க சொல்லி இந்தியர்களிடம் எழுந்திருந்த கோஷத்திற்கு என்ன அடிப்படை காரணம் இருந்ததுவோ அதே காரணம் வேறுவிதத்தில் தற்போது நாட்டில் ஏற்பட உள்ளது.


இதை இப்போது ஆளும் மத்திய அரசு மேலும் இனி அடுத்து ஆள வரும் மத்திய அரசாங்கம் இந்த மாற்றத்தை தற்சார்பு பொருளாதாரம் (Self-sufficiency Economy or Independent Economy) என்று அழைக்கும்,


தற்சார்பு பொருளாதாரம் என்றால் ? -

மற்ற நாடுகளை சார்ந்து இருக்காமல் நம் நாட்டிற்கு வேண்டிய பொருட்களை நாமே உற்பத்தி செய்வது மற்றும் உற்பத்தி செய்த பொருட்களை நம் நாட்டிலேயே விற்பதற்கான சந்தை நிலைமையை ஏற்படுத்துவது மேலும் இறக்குமதி செய்யும் நிலையில் உள்ள பொருட்களையும் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முயற்சிப்பது. நாம் நாட்டின் பொருளாதாரம் அதாவது பண வளம் வேறு ஒரு நாட்டின் ஈட்டு லாபமாக மாறாமல் நம் நாடு பொருளாதார தன்னிறைவு காண்பது. சுயாதீனமான தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்ற கொள்கைகளை மற்றும் செயல்பாடுகளை மேற்கொள்வது ஆகியவை தான் தற்சார்பு பொருளாதாரம் (Self-sufficiency Economy or Independent Economy) ஆகும்.


சரி இப்போது நான் பேச எடுத்துள்ள விஷயத்திற்க்கு வருகிறேன் எவருக்கும் எதனால் எந்த நிலையில் ஜாதகத்தில் வேலையின்மை ஏற்படுகிறது என்பதை தான் பார்க்க போகிறோம் 

 

ஒருவரது ஜாதக கட்டத்தில் 12 ஸ்தானங்களில் கர்ம ஸ்தானம் அதாவது வேலை வீடு என்று அழைக்கப்படக்கூடிய வீடு 10 ஆம் ஸ்தானம் ஆகும் அந்த 10 ஆம் ஸ்தானம் மற்றும்10 ஆம் ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்கள், 10 ஆம் ஸ்தானத்தின் அதிபதி மற்றும் 10 ஆம் ஸ்தானத்தின் அதிபதியுடன் சேரும் கிரகங்கள், அந்த கிரகம் அமைந்த விதம் இதன் பலத்தை பொருத்து பலருக்கு அவர் அவர்  வேலைவாய்ப்பின் பலம் அமைந்து வரும். மேலும் ஒருவரது ஜாதக கட்டத்தில் 12 ஸ்தானங்களில் லாப ஸ்தானம் அதாவது வருமான வீடு என்று அழைக்கப்படக்கூடிய வீடு 11 ஆம் ஸ்தானம் ஆகும் அந்த 11 ஆம் ஸ்தானம் மற்றும்11 ஆம் ஸ்தானத்தை பார்க்கும் கிரகங்கள், 11 ஆம் ஸ்தானத்தின் அதிபதி மற்றும் 11 ஆம் ஸ்தானத்தின் அதிபதியுடன் சேரும் கிரகங்கள், அந்த கிரகம் அமைந்த விதம் இதன் பலத்தை பொருத்து பலருக்கு அவர் அவர் வேலைவாய்ப்பில் சம்பளம் மற்றும் வருமான பலம் அமைந்து வருகிறது..... மீதி வீடியோவில்



- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்


Powered by Blogger