மகரம், கும்பம், மீனம் லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரக..

மகரம், கும்பம், மீனம் லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரக..


 

மகரம் லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...

மகரம் லக்னத்தில் தோன்றியவர்களுக்கு செவ்வாய், வியாழன் மற்றும் சந்திரன் ஆகியவை பாப பலனை தரக்கூடியவர்கள். சுக்கிரன் மற்றும் புதன் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும். சனி தனிபட்ட முறையில் மரணத்திற்குக் காரணமான கிரகமாக இருக்க மாட்டார், செவ்வாய், வியாழன் மற்றும் சந்திரன் என்ற மற்ற பாப பலனை தரக்கூடிய கிரகங்களோடு சனி சமபந்தபடும் போது மட்டும் மாரகம் செய்வார், சூரியன் நடுநிலை வகிக்கிறது, சுக்கிரன் மட்டுமே உயர்ந்த ராஜயோகத்தை உண்டாக்க வல்ல கிரகம் ஆகும்.

கும்பம் லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...

கும்பம் லக்னத்தில் தோன்றியவர்களுக்கு வியாழன், சந்திரன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் பாப பலனை தர வல்லவர்கள் ஆகும். அதே நேரத்தில் சுக்கிரனும் சனியும் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும், ராஜயோகத்தை ஏற்படுத்தும் ஒரே கிரகம் சுக்கிரன் மட்டுமே. வியாழன், சூரியன் மற்றும் செவ்வாய் மரணத்திற்குக் காரணமான கிரகங்கள் ஆகும், புதன் இடையூறு மற்றும் குறுக்கீட்டு விளைவுகளை அளிக்க வல்ல கிரகம்.

மீனம் லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரகர் கிரகங்கள்...

மீனம் லக்னத்தில் தோன்றியவர்களுக்கு சனி, சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் பாப பலனை தர வல்லவர்கள் ஆகும், செவ்வாய் மற்றும் சந்திரன் சுப யோக பலனை தரக்கூடியவர்கள் ஆகும், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள் ராஜயோகத்தை ஏற்படுத்தும் கிரகங்கள். செவ்வாய் மரணத்திற்குக் காரணமான கிரகம் ஆனால் அதை தனித்து செய்யமாட்டார். சனியும் புதனும் மாரகத்திற்குக் காரணமான நிலை ஏற்படுத்தலாம்.

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்
ஜோதிஷ் சிவதத்துவ சிவம் - எம்மிடம் உங்களின் சோதிட பலன்களை பெற நீங்கள் உங்களின் பிறந்த விவரங்கள்...

0 Response to "மகரம், கும்பம், மீனம் லக்னத்திற்கு ப்ரஹத் பராசர ஹோரா சாஸ்த்ரம் கூறும் சுபர், பாபர், யோகர், மாரக.."

கருத்துரையிடுக

Powered by Blogger