ஜோதிட துணுக்குகள் பகுதி - லக்ன காரக சுப பலன்கள் முழுமையாக பெற, லக்னத்தில் புதன், லக்னத்தில் சுக்கிரன், லக்னத்தில் குரு இருந்து..


லக்ன காரக சுப பலன்கள் முழுமையாக பெற, லக்னத்தில் புதன், லக்னத்தில் சுக்கிரன், லக்னத்தில் குரு இருந்து..

ஜனன லக்னத்தில் சாமன் கவி தேவகிரஹன் தனித்திருந்து ஜனன லக்னத்தான் சுப ஸ்தானம் சுப சேர்க்கை கொண்டு ஆனவன் லக்ன காரக சுப லக்ஷணத்தை முழுதாய் கொண்டு ஆனவன் லக்ன பிறப்புக்கு உண்டான தகுதிகளை பெறும் தரும் பலவான், தேகபலவான், சுந்தரன், கல்பனாலங்காரன் அருகன் ஆசான் காரியானுகூலன் ஆகும்.

ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் புதனோ அல்லது சுக்கிரனோ அல்லது குருவோ தனியாக இருந்து அந்த ஜாதக லக்னாதிபதி கேந்திர திரிகோண ஸ்தானங்களை அடைந்து சுப கிரகங்களை சேர்ந்து இருக்க அந்த ஜாதகர் லக்ன காரகத்திற்கு சொல்லப்படுகின்ற நல்ல குறிப்புகளை முழுமையாக கொண்டு பிறந்தவனாக இருப்பார் லக்னத்திற்கு உண்டான தகுதிகளை பெறக்கூடியவராக அல்லது தரக்கூடியவராக இருப்பார்கள்.

தேகபலவான் - உடல்  நலம் பலம் கொண்டவர்
சுந்தரன் - அழகுள்ளவர்
கல்பனாலங்காரன் - நல்ல விதமான அல்லது சிறந்த விதமான கற்பனைகள், படைப்பாற்றல். நேர்த்தியாக்கும், அழகாக்கும் திறமை இருக்கும்.
அருகன் - அறிவால் பண்பால் தகுதியான நபர்
ஆசான் - அறிவான பண்பான விஷயங்களை மற்றவருக்கு எடுத்து கூறுபவர்.
காரியானுகூலன் - நினைத்த காரியத்திற்கு அதாவது நிகழ்ச்சிக்கு செயலாக்கம் நிறைவேற்றம் கொடுக்ககூடிய சூழல் மற்றும் வழிவகைகள் சாதகமாக பெற்றவர்.

0 Response to "ஜோதிட துணுக்குகள் பகுதி - லக்ன காரக சுப பலன்கள் முழுமையாக பெற, லக்னத்தில் புதன், லக்னத்தில் சுக்கிரன், லக்னத்தில் குரு இருந்து.."

கருத்துரையிடுக

Powered by Blogger