வரவுள்ள குழந்தைக்கு நல்ல மற்றும் சிறந்த சிந்தனைகள் தோன்ற செய்ய வேண்டிய…

வரவுள்ள குழந்தைக்கு நல்ல மற்றும் சிறந்த சிந்தனைகள் தோன்ற செய்ய வேண்டிய…
 
எல்லா தாயும் தகப்பனும் தன் குழந்தைக்கு நல்ல மற்றும் சிறந்த சிந்தனைகள் வந்து சேர வேண்டும் என்று நினைப்பார்கள், அதற்கு பயன்படும் முக்கிய செயல்களில் ஒன்று அதாவது அதற்க்காக தாயும் தகப்பனும் செய்ய வேண்டிய முக்கிய காரியமாக உள்ள ஒரு செயல்பாட்டை பற்றி தான் இப்போது பேச இருக்கிறேன், அதாவது குழந்தைக்கு நல்ல சிறந்த சிந்தனைகள் வந்து சேர வேண்டும் என்றாலும் அல்லது குழந்தைக்கு நல்ல சிறந்த சிந்தனைகள் வளர வேண்டும் என்றாலும் பிரசவ காலத்தில் தாயின் செயல்களும் மற்றும் தாயை சுற்றி ஒலிக்க கூடிய வார்த்தைகளும் மற்றும் பேச்சுக்களும் மிக முக்கியமாகும் அதிலும் குழந்தை பிறக்க இருக்கும் நாட்களில் தாயிற்கு சுற்றி ஆறுதலான மற்றும் நம்பிக்கைகுரிய வார்த்தைகள் முக்கியமாக மங்கலகரமான வார்த்தைகளை பேச வேண்டும் அதிலும் மிக முக்கியமாக குழந்தை பிறக்க இருக்கும் நாளுக்கு முந்தைய நாளில் தாய் தூங்க போகும் காலத்திலும் மற்றும் குழந்தை பிறக்க இருக்கும் நாள் அன்று காலையில் தாய் தூக்கத்தில் இருந்து விழிக்கும் அந்த காலத்திலும் தாயை சுற்றிலும் மற்றும் தாயின் சிந்தனைகளுக்குள்ளும் தெய்வீக ஒலிகள், மங்கலகரமான மந்திரங்கள், நல்ல அறிவை விருத்தி செய்யும் சாஸ்திர வார்த்தைகள், தேவாரம் திருவாசகம் நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற நூல்களில் உள்ள சிறந்த சிந்தனையை தூண்டக்கூடிய பாடல்கள், நல்அறத்தை சொல்லக்கூடிய திருக்குறள் போன்ற தமிழ் நெறி நூல்களின் செய்யுள்கள். ராமாயணம், மகாபாரதம், பாகவதம், கந்த புராணம், சிவ புராணம் போன்ற புராணங்களில் வரக்கூடிய தர்மத்தை அல்லது அறிவு விருத்திக்கு பயன்படும் காட்சிகள், இறைவனை பற்றிய உயர்ந்த சிந்தனைகள் இது போன்றவைகளை தாய் சிந்திக்கவோ இல்லது தாயின் காதில் ஒலிக்கும் படியோ அமைய வேண்டும் மேலும் குழந்தை பிறக்க இருக்கும் நாட்களில் தாய் காலையில் விழித்தவுடன் சென்று பூஜை அறையிலேயோ அல்லது வீட்டில் பூஜை செய்ய பயன்படுத்தபடும் அறையிலேயோ இறைவனுக்காக ஏற்றி வைக்கபட்டுள்ள பிரகாசமான விளக்கு ஒளிகளை காண வேண்டும் அல்லது தாயால் எழ முடியவில்லை என்றால் அந்த தீப ஒளியை எடுத்து வந்தும் தாயிற்கு காட்டலாம்

இப்படியெல்லாம் செய்யும் போது தாயின் உள்ளத்தில் உயர்வான கருத்துக்களும் மற்றும் மங்கலகரமான காட்சிகளும் தங்கும் அதன் மூலமாக தாயின் கர்ப்ப பையில் இருக்கும் குழந்தையின் உள்ளத்தின் உள்ளும் உயர்வான கருத்துக்களும் மற்றும் மங்கலகரமான காட்சிகளும் சென்று சேரும் அதனால் குழந்தையின் பிற்காலங்களில் அந்த குழந்தைக்கு நல்ல மற்றும் சிறந்த சிந்தனைகள் வர மிகவும் பயன்படும் சற்று விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வேத ஜோதிடத்தின் படி ஒரு ஜாதகத்தை கணிக்க மிகவும் முக்கியமானது குழந்தை பிறக்கும் அன்றைய சூரிய உதய காலம் அது எவ்வளவு முக்கியமோ அது போல குழந்தை பிறக்க இருக்கும் அந்த நாட்களில் தாய் தூங்க முனையும் காலமும் மேலும் தூக்கத்தில் இருந்து விழிப்பு அடையும் காலமும் மிக முக்கியமாகும் அந்த காலத்தில் நான் மேலே சொன்னது போன்ற நல்ல விஷயங்களை தாய் சிந்திக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும் அப்போது குழந்தைக்கு பிற்காலத்தில் நல்ல மற்றும் சிறந்த சிந்தனைகள் வர மிகவும் பயன்படும்....

- ஜோதிஷ் சிவதத்துவ சிவம்

0 Response to "வரவுள்ள குழந்தைக்கு நல்ல மற்றும் சிறந்த சிந்தனைகள் தோன்ற செய்ய வேண்டிய…"

கருத்துரையிடுக

Powered by Blogger